வருக! வருக! செப். 2024

1 Min Read

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவரும் அமெரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரும் சமூகநீதி ஆர்வலருமான சோம. இளங்கோவன் அவர்கள், “அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள் – ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்” என்ற தன்னுடைய நூலை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்று மருத்துவர் சோம.இளங்கோவன் கவிதை வருமாறு:–

மாணவராய்த் துடிப்பு
இளைஞராய்ப் படிப்பு
உழைப்பால் உயர்ந்தே
முதல்வராய் இருக்கை!
செறிவானத் திட்டங்கள்
சிறப்பாக நிறைவேற்றித்
தமிழரின் பொற்காலம்
தரணியே போற்றுதே!
திராவிட மாடலே
உலகை வெல்லுமே!
1971–ல் முத்தமிழ் அறிஞர்
2024–ல் முத்துவேலரின் பேரர்
கலைஞரின் வார்ப்பு
தமிழரின் தளபதி!
பெரியார் பன்னாட்டின்
வீரமணி விருதை
வழங்கியே மகிழ்ந்தோம்!
வருக சிகாகோ
வந்து பாருங்கள்
கொடிகட்டிப் பறக்கின்றோம்
நெஞ்சமெல்லாம் தமிழ்தான்!
வருக! வருகவே! வாழ்க வாழ்கவே!

மருத்துவர் சோம.இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு
அமெரிக்கா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *