துறையூர் கழக மாவட்டம் சார்பில் தெருமுனைக் கூட்டம்

Viduthalai
2 Min Read

துறையூர், செப். 13- துறையூர் கழக மாவட்டம் சார்பில் 12.9.2024 மாலை 6 மணிக்கு மூடநம்பிக்கை பரப்புவதை தடுக்கவும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமை தாங்கி நடத்தினார். மாநில ப.க.அமைப்பாளர் அ. சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் பா. ஆல்பர்ட். மாவட்ட துணைத் தலைவர் முசிறி இரத்தினம். மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தஞ்சை. இரா. பெரியார் செல்வன் மிக சிறப்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாறு. மூடநம்பிக்கை ஒழிப்பு. 51 A(h) சட்டப்படி அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் வலியுறுத்தி தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திராவிடர் கழகத்தின் சாதனங்கள் என நீண்டதொரு சொற்பொழிவை தந்து அனைத்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை தலைவர் செ. செந்தில் குமார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். த. ரஞ்சித்குமார். ஒன்றிய கழகதலைவர் இர.வரதராஜன்.மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண்ராஜ். மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ரெ. காவியா.மாவட்ட ப.க.அமைப்பாளர் மு. தினேஷ். மாவட்ட ப. க. துணை தலைவர் த. கலைப் பிரியன். மாவட்ட ப. க. துணை செயலாளர் கருணாகரன். துறையூர் நகர தலைவர் க. இராஜா. செயலாளர் ந.இளையராஜா.நகர இளைஞரணி செயலாளர் ஸ்டாலின். உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர் எம். ஏ. இரமேஷ்.செயலாளர் சி.

சத்தியசீலன். மாணவர் கழகம் ம. இனியன் சம்பத். நகர ப. க. அமைப்பாளர் அ. தமிழ்செல்வன். கோர்ட் பெ.பாலகிருஷ்ணன்.கோர்ட்.எம்.ஆர்.சந்திரபோஸ்.கோர்ட்.இரா.நந்தகுமார்.மண்ணச்சநல்லூர் நகர தலைவர் பாலசந்திரன். லால்குடி மாவட்ட ப. க. செயலாளர் நொச்சியம்.பாலசுப்ரமணியன்.பேரூர் சண்முகம். சோபனபுரம் நடராஜன். விசிக. நகர செயலாளர் மீசை. குமார். விசிக ஆசிரியரணி முனுசாமி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொன்னுசாமி. இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம். நாகலாபுரம் சுப்ரமணி. குணசேகரன். ஆசிரியர் ரஞ்சனி. ஆட்டோ ஓட்டுநர்கள். தட்டுரிக்சா ஓட்டுநர்கள். பூ மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி மறைவிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் இரங்கல் உரை படிக்கப்பட்டு இரண்டு நிமிடங்கள் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு கூறினார். கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *