தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க மின்னணுப் பெட்டகம்!

Viduthalai
1 Min Read

சென்னை, செப்.8- தமிழ்நாட்டில் சென்னை அய்அய்டி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக எலக்ட்ரானிக் கையடக்க மின்னணு பெட்டகத்தை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அய்அய்டியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 253 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து இந்த எலக்ட்ரானிக்கல் கிட்டை வழங்குவதற்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா 9 எலக்ட்ரானிக்கல் கிட் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பாடத்திட்டங்களில் வரும் அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த திட்டங்களையும் பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக பாடம் நடத்தலாம். இதில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக்கல் சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக சென்னை அய்அய்டி வளாகத்திற்கு 4 குழுக்களாக ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 253 அரசு பள்ளிகளுக்கு எலக்ட்ரானிக்கல் கிட் வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மேலும் இதனை வைத்து பரிசோதனை செய்வதற்காக வாரத்தில் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என சென்னை அய்அய்டி அறிவுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *