5 ஏக்கர் நிலம் உடையோருக்கு 50% மானியம் + பம்ப் செட்

viduthalai
2 Min Read

உதவிக் கரம் நீட்டும் தமிழ்நாடு அரசு

சென்னை, செப்.8 தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்காக, மாநில அரசு எத்தனையோ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வேளாண் மைக்கென தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, பல்வேறு வகையான உத்திகளை புகுத்தி, நலத்திட்டங்களையும் அறிவித்து, அதனை முறையாக செயல் படுத்தியும் வருகிறது. பல்வேறு உழவர் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து வருவது, விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச் சியை தந்து வருகிறது.

இ-வாடகை செயலி, சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், உழவர் சந்தை திட்டத்தை வலுப்படுத்தும் திட்டம், சிறு, குறு விவசாயிகளை இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல், விளைபொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற ஏராளமான நலத்திட்டங்களை வேளாண்மை – உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.
குறைந்த மானியம்: இதில் விவசாயிகளால் பெரிதும் ஈர்க்கப்படுவது, பம்பு செட்டுகள் குறித்த அறிவிப்புகளாகும்.. காரணம், குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகிவிடுவதுடன், பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகமாகிறது.. இதனால், மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சேதமடைகிறது.

எனவேதான், இத்திட்டத்தின் கீழ் புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவி வழங்கப்படுகிறது. மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான பாசன நீர் இறைத்தல் போன்றவையே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

பம்ப் செட்டுகள்: பாசனத் திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசும் அவ்வப்போது கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

அதன்படி, பழைய பம்பு செட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக் கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *