சென்னை,செப்.8- உலகின் மிகப்பெரிய வங்கியான பிஎன்ஓய் மெலன் (BNY MELLON)வங்கி அதிகாரிகளை சந்தித்து சென்னையில் பன்னாட்டு தரத்திலான பயிற்சி மய்யம் உள்ளிட்டவை அமைக் கும் வகையில் புதிய முதலீடுகளை மேற் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
தொழில்துறையில் பல்வேறு சாதனைகள்
முதலைமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான தமிழ் நாடு அரசு கடந்த 3 ஆண்டு களில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. அத்துடன் முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பெரிய லட்சியத்தை கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு முன்னெடுப்புகள் உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருப்பதால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும தகவல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மின்னணுவியல் புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளைய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு திறன்களை வளர்க்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கி பயிற்சியளித்து வருகிறது.
புதிய முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு!
படித்ததிறன்மிகு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பய ணம் மேற்கொண்டு வருகிறார். இப்ப யணத்தில் சிகாகோவில் பிஎன்ஒய் மெலன் (BNY MELLON) வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த பிஎன்ஒய் மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கி களில் ஒன்றாகும். இவ்வங்கி நிதிப் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்டதாகும்.
நியூயார்க் நகரை தலை மையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கி இந்தியாவிலும் பல கிளைகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்தவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பன்னாட்டு தரத்தில் பயிற்சி மய்யம்
பிஎன்ஒய் மெலன் வங்கி தனது 6 முக்கிய மய்யங்களில் ஒன்றாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் பன்னாட்டு தரத்தில் பயிற்சி மய்யம் அமைக்கவும், தரவுகளை பகுப்பாய்வு செய்யவும் மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிஎன்ஒய் மெலன் வங்கியின் துணைத்தலைவர் செந்தில்குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில்துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழி காட்டி நிறுவன மேலாண் இயக்கு நர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.