தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் தேர்வு

Viduthalai
1 Min Read

பண்ருட்டி, செப்.7- இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான கூடைப் பந்து போட்டிக்கு தமிழ்நாடு அணிக்கான கடலூர் மண்டல அளவில் வீரர் வீராங்கனைகள் தேர்வு பண்ருட்டி யில் உள்ள ஜான் டி வே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், கரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு

அதில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் கலந்து கொண்டு 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த ஆர்.பிரதீப் குமார் மாநில அளவிலான தேர்வுப் போட் டிக்கு தகுதி பெற்றனர்.
மாநில அளவிலான தேர்வு போட்டிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்றது.
மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரரையும் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர், மற்றும் ரஞ்சனி ஆகியோரையும் பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் வாழ்த்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *