தமிழ்நாட்டில் உள்ள 26 அரசுப் பள்ளிகளில் “புதிய திட்டம்”

Viduthalai
1 Min Read

ரூ.5.60 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு.!

சென்னை, செப்.4 தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 26 பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்காக சுமார் ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பள்ளிக்கு சுமார் 20 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கழிவு நீர் மறுசுழற்சி, மூலிகை தோட்டம் உருவாக்கம், காய்கறி தோட்டம் அமைத்தல், மக்கு உரம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மேலும் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் போன்றவைகள் அமைக்கப்பட இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *