கடவுள் போதை – மதுபோதையால் மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்று மூதாட்டியை கொலை செய்த அவலம்

1 Min Read

ஜெய்ப்பூர்,ஆக.8 – ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் ராஜ்கோட் எனும் 70 வயது முதியவர் மது போதையில் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டு 85 வயது மூதாட்டியை அடித்து கொலை செய் துள்ளார்.

அவர் அந்த மூதாட்டியை கொன்ற பிறகு மீண்டும் உயிர்பிக்கலாம் என்று நினைத்துள்ளார். தர்பால் கிராமத்தில் உள்ள மகாதேவர் கோவிலின் அருகே வைத்து அவர் அந்த மூதாட்டியை குடையால் தாக்கியும், கால்களால் மிதித்தும் கொலை செய்துள்ளார். 

இது தொடர்பான அதிர்ச்சி யூட்டும் காணொலி சமூக வலை தளத்தில் வைரலாக பரவியதை அடுத்து பிரதாப் சிங்கை காவல்துறையினர் கைது செய்ததோடு காணொலியைப் பதிவு செய்தவர் களையும் கைது செய்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *