புதுச்சேரி: தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

Viduthalai
2 Min Read

புதுச்சேரி, ஆக.29- புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகம் சார்பில் கல்லூரி மாண வர்களுக்கானத் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டிச் சிறப்பாக நடைபெற்றது.
பேச்சுப் போட்டி 25.8.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில் புதுச்சேரி இராசா நகர், பெரியார் படிப்பகத்தில் தொடங்கியது. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் கு. இரஞ்சித் குமார் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர்
பா. குமரன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகத் தோழியர் ஜெ.வாசுகி பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பேச்சுப் போட்டியின் நடுவர்களாக எழுத்தாளர் புதுவை ந.மு.தமிழ்மணி, மாநிலப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச்செயலாளர் வி.இளவரசி சங்கர், குறும்பட இயக்குநர், எழுத்தாளர் புதுவை பிரபா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அறிவிக்கப்பட்ட தலைப்புகளில் அய்ந்து நிமிடங்கள் பேசினார்கள். அவர்களில் சிறப்பாகப் பேசியவர்கள் நடுவர்கள் குழுவால் தேர்வுச் செய்யப்பட்டனர்

முதல் பரிசு: ஆ.சர்மிளா ரூ. 3,000/-ம், இரண்டாம் பரிசு: [இரண்டு நபர்கள்] ஜு.சிவசிறீ, எ.ஆய்ஷாசஃபானா இரு வருக்கும் தலா ரூ.2,000/-ம் ரூ.2,000/-ம், மூன்றாம் பரிசு: எஸ்.சமீரா பர்வீன் ரூ.1,000/- வெற்றி பெற்ற அனைவருக்கும் பயனாடையும், பணப் பரிசும் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் பங்கேற்பாளர்கள் சான்றிதழ் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 100/-ம் வழங்கப்பட்டது. போட்டியில் கூடுதலாக மாணவிகளுடன் வருகை தந்து சிறப்பித்த வில்லியனூர் காயிதே மில்லத் கல்லூரி முதல்வர் முசைஃபுர் ரஹ்மான் அவர்க ளுக்கு பயனாடை அணிவித்தும் தமிழர் தலைவர் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனை’ புத்தகம் வழங்கியும் சிறப்புச் செய்யப்பட்டது. மாநிலப் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே. அன்பரசன் , பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நெ. நடராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் மு. குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனி, இளைஞரணி தலைவர் தி. இராசா விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர் இரா.ஆதிநாராயணன், நெட்டப்பாக்கம் கொம்யூன் தலைவர் தெ. தமிழ்நிலவன், ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், பாரிஸ். இராஜேந்திரன், பெரியார் நகர் சத்தியா, வீரபாரதி, துரை, பிரித்திங்கா, பிரிவின் குமார், சி.வீரமணி, திலக் பாரதி, பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டி யில் கலந்து கொண்ட தோழர் சபீர் முகமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு இளைஞரணித் தலைவர் தி.இராசா பயனாடை அணிவித்தார்.
நிறைவாக விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *