‘டோன் டச்!’

Viduthalai
1 Min Read

கிருட்டிணகிரி நகரில் கடந்த 25 ஆம் தேதி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பார்வையாளர்களாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.
கிருட்டிணகிரி நகராட்சித் தலைவர் திருமதி பரிதா நவாப் அவர்கள் தொடக்க முதல் கடைசிவரை கூட்டத்தில் இருந்து, உரைகளைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்.
பத்து மணித் துணிகள் பேசினாலும், ‘‘பளிச் பளிச்சென்று‘‘ அரிவாள் வெட்டுபோல வந்து வீழ்ந்தன அவரது வார்த்தைகள்.
ஒரு கருத்து மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.

இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான – தேவையான கருத்தும்கூட!
பெண்களுக்குக் குறிப்பாக மாணவிகளுக்கு அவர் கூறிய அறிவுரையாக – ஏன் எச்சரிக்கையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.
ஏடுகளைத் திறந்தால் ஒவ்வொரு நாளும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் செய்திகள் வரத் தவறுவதேயில்லை.
அந்த அடிப்படையில் கிருட்டிணகிரி நகர மன்றத் தலைவரின் கருத்து ஓர் எச்சரிக்கை மணியாகும்..

இதோ அவர் பேசுகிறார்:
‘‘திராவிடர் கழகக் கூட்டத்தில் இதுபோன்ற முக்கிய கருத்துகளைக் கூறுவது பொருத்தமானதாகும்.
தொடுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ‘குட் டச்‘ (Good touch), மற்றொன்று ‘பேட் டச்‘ (Bad Touch) ஆகும்.
அப்படி யாரேனும் தொட்டால் பெண்கள் இனி சொல்லவேண்டிய வார்த்தை என்ன தெரியுமா?
‘டோன் டச்‘ (Don’t Touch) என்று உடனே சொல்லுங்கள்‘‘ என்று சொன்னாரே பார்க்கலாம்!
கைதட்டல் அடங்கிட வெகு நேரமாயிற்று!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதன் அருமை புரிகிறதா?
– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *