விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

Viduthalai
1 Min Read

விருதுநகர், ஆக.28 விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், 24.08.2024 சனி காலை 9 மணியளவில், சாத்தூர் K.A.P. திருமண மண்டபத்தில், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும், சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தலைமையில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17 அய் முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட கழக தலைவர் கா.நல்லதம்பி, அமைப்பாளர் வெ.முரளி, சிவகாசி S.F.R. கல்லூரிப் பேராசிரியர் செ.ரெங்கேஸ்வரி ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து போட்டியை வழிநடத்தினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 40 கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக சாத்தூர் P.S.N.L. கல்வியியல் கல்லூரி மாணவர் த.கார்த்திக்குமார் முதலிடம் பெற்று, ரூ.மூவாயிரம் பரிசினைப் பெற்றார்.

இரண்டாமிடம் பிடித்த விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் கல்லூரி மாணவி மா.கார்த்திகாதேவி ரூ.இரண்டாயிரம் பரிசு பெற்றார். விருதுநகர் V.H.N.S.N. கல்லூரி மாணவி பி.கவுசல்யா மூன்றாமிடம் பெற்று ரூ.ஆயிரம் பரிசு பெற்றார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், ‘உண்மை’ இதழ்களும் வழங்கப்பட்டது. அருப்புக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் இரா.முத்தையா, இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர், சாத்தூர் முத்துப்பாண்டி மற்றும் தோழர்கள் உடனிருந்து உதவினர். நீிறைவாகப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்ற மாணவர் த.கார்த்திக்குமார் நன்றி கூற, போட்டி நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *