கழக பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவை செயல்படுத்துவது என தருமபுரி மாவட்ட கழகம் முடிவு

Viduthalai
1 Min Read

தருமபுரி, ஆக. 28- தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.8.2024 அன்று மாலை 6 மணி அளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு. சரவணன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளராக புதியதாக பொறுப்பேற்ற பீமா. தமிழ்பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர்
கா. கதிர், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்ல துரை, மாவட்டத் துணைத் தலைவர் இமாதன், கழக காப்பாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளக் கழக செயலாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
புதிதாக பொறுப்பேற்ற திராவிடர் கழக மாவட்ட செய லாளர் பீம. தமிழ்பிரபாகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இர. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு தலைமை நிலைய அமைப்பாளர் ஊமை. ஜெய ராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவான சுயமரியாதை இயக்க நூற்றாண்டை ஒட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு விளக்க பரப்புரை கூட்டத்தை பெண்ணாகரத்திலும், தருமபுரியிலும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
திருச்சியில் நடைபெறும் நாத்திகர் மாநாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பெருவாரியான தோழர்கள் பங்கேற்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்ன ராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அன்பரசன், பாப்பாரப்பட்டி நகரத் தலை வர் சுந்தரம், தருமபுரி நகர தலைவர் கருபாலன், மாவட்டத் துணைச் செயலாளர் மாஸ்டர் மாணிக்கம், தொழிலாளரணி மாவட்ட செயலாளர் மாரவாடி காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *