நல்லதொரு சேவை

1 Min Read

பெரியார் படிப்பகத்தில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பேப்பர்களும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் பெரியோர்களுக்கு பயன்படும் முறையில் நல்லதொரு படிப்பகமாக அமைந்துள்ளது. அதுவும் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளதால் நிறைய பொது மக்களும் சந்திக்க கூடிய இடமாகவும் மற்றும் பேருந்துக்காக நிற்கும் இடைவேளையில் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கிராமத்திற்கு செல்கின்ற மக்கள் அந்த நேரத்தில் உலக செய்திகளை படித்து தெரிந்து கொள்கின்றனர். கரும் பலகையில் நிந்தமும் ஒரு செய்தி தந்தை  பெரியாரினுடைய கருத்துகள் பரிமாறப்படுகின்றன. அந்த வாசகத்தை படித்துப் பார்த்து மகிழ்ச்சி யடைகின்றனர். அதுபோல் அங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு நல்ல அறிவுரையும் சொல்லு கின்றனர். இந்த படிப்பகம் மக்களுக்கு கிடைத்த  நல்லதொரு சேவையாக அமைந்துள்ளது.

பெரியார் படிப்பகத்திற்கு நன்றி. 

– சோ. வைரமுத்து

பட்டதாரி ஆசிரியர், 

அரசு மேல் நிலைப்பள்ளி, தெக்கூர்,

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *