குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்தது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் மாநகர செயலாளர் இராஜசேகர் தோழர்கள் , பொன் எழில் அரசன் மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பகுத்தறிவு விழிப் புணர்வுக்கான துண்டறிக்கைகளை வழங்கினர். பொதுமக்கள் படித்து அறிவுத்தெளிவு பெற்றனர்.
பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books