ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Viduthalai
1 Min Read

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை, ஆக.25 கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் தொகை மற்றும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆனால், பாஜக ஆட்சியில் ஜாதி வாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படாமல் போனதால், 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
ஒன்றிய அரசின் இந்த நிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 1951 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது இதைத் தொடர முடியாமல் ஒன்றிய அரசு திணறி வருகிறது.

மக்களவை தேர்தலின் போது, காங்கி ரசும், ராகுல் காந்தியும் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கோரினர். ஆனால், இது தொடர்பாக பிரதமர் மோடி அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றார் செல்வப் பெருந்தகை.
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசுக்கு முழு அதிகாரம் இருந்தாலும், மாநில அரசுகள் புள்ளிவிவரங்களை மட்டுமே சேகரிக்க முடியும். இதன் காரணமாக பாமக உள்ளிட்ட கட்சிகள் கட்சி சார்பற்ற அரசியல் மூலம் மாநில அரசுகளை குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்துள்ளது.இதற்கு தீர்வாக மக்கள் தொகை மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *