சி.கொழந்தாயம்மாள் படத்திறப்பு

Viduthalai
1 Min Read

ஆத்தூர், ஆக.21 உதயசூரியனின் வாழ்விணையர் க.சுகந்தி உறவினர்கள் – தோழர்களுடன் படத்திறப்பு தொடங்கியது. தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமை யேற்றார். மாவட்டச் செயலாளர் சி.பூபதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
க.சுகந்தி, புவனேஸ்வரி ஆகியோர் சி.கொழந்தாயம்மாள் அம்மையாரின் படத்தினை திறந்து வைத்தனர்.

பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆத்தூர் வா.தமிழ் பிரபாகரன், தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, சேலம் மத்திய மாவட்ட திமுக மகளிர் தொண்டரணித் துணைத் தலைவருமான புவனேஸ்வரி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வீரமணி இராஜீ, எஸ்.சையத் இப்ராஹிம், இரா.சிவப்ரியன், ஜே.கே.குமார், அழகாபுரம் முரளி, அரங்க இளவரசன், பரிமளா, இராவண பூபதி, ஜெ.பிரபாகரன், சு.இமயவரம்பன், பழ.பரமசிவம், வழக்குரைஞர் ஆர்.செல்வகுமார் உள்ளிட்ட தோழர்கள் இரங்கல் உரையாற்றினர்.
உதயசூரியனின் வாழ்விணையர் க.சுகந்தி அவர்களை மனரீதியாக பலப்படுத்தும் வாய்ப்பாகவும் – மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்தாக்கத்துடன் தம் இரங்கலுரையை அமைத்துக் கொண்டனர்.
க.சுகந்தி உதயசூரியன் நன்றி கூற படத்திறப்பு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *