கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.8.2024

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாஜக அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிக்கிறது: காங். தலைவர் கார்கே காட்டம்

*ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காண்பிக்கப் படுகிறது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. நீதிமன்றத்தில் முறையிட்டு நிதி பெறும் சூழல் உள்ளது. சித்தராமையா குற்றச்சாட்டு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பொங்கல் முதல் குறைந்த விலையில் மருந்துகள் – 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: சுதந்திர நாள் உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சுதந்திர நாள் உரை ஆற்றிய பிரதமர் மோடி மதம் சார்ந்த சிவில் சட்டம் என்று கூறியது அம்பேத்கரை அவமதிப்பதாகும். இதில் மோடி தவறான தகவல்களை தருகிறார். 1950-களின் நடுப்பகுதியில் ஹிந்து தனிநபர் சட்டங்களில் மாற்றத்தை விரும்பியவர் அம்பேத்கர். ஆனால் இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*மகாராட்டிர துணை முதலமைச்சரும், என்சிபி தலைவருமான அஜித் பவார், பழங்குடியினர், எஸ்சி, ஓபிசி, சிறுபான்மையினர் போன்றோரின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தி டெலிகிராப்:

* அயோத்திக்கு பயணிகள் செல்லாததால், விமான நிலையம் வறண்டு காணப்படுகிறது. ஏழு மாதங்களுக்குள், குறைந்த பட்சம் 13 நகரங்களில் இருந்து தினசரி விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன, அவை அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *