நன்கொடை

1 Min Read

அரசியல்

ஆசிரியர் அவர்களால் முன்ன தாகவே பிறந்த நாள் வாழ்த்து பெற்ற கழக காப்பாளர் அருப்புக்கோட்டை அ.தங்கசாமி அவர்கள் தனது 95 ஆவது பிறந்த நாளான 10.8.2023அய் நினைவு கூறும் பொழுது ஆசிரியர் அவர்களால் 3.6.1999இல் இளம் விஞ்ஞானி என்று பெயர் பெற்ற தனது மூத்த மகன் மருத்துவர் த.செல்வகுமார் ஒன்றிய அரசில் பதவி உயர்வு பெற்று இயக்கு நராக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள பிளாஸ்பூர் என்ற ஊருக்கு 1.8.2023 அன்று முதல பணியாற்ற சென்றுள்ளார். மேலும் த.செல்வகுமார்-கஸ்தூரியின் மகனும், தங்கசாமி-ராஜம் அவர்களின் பேரனுமான ஏ.டி.எஸ்.ராஜேஷ் தங்கம் தனது பொறியியல் படிப்பை முடித்து விட்டு மேல் உயர் படிப்புக்காக கனடா நாட்டில் உள்ள கார்விடன் பல்கலைக்கழகத் திற்கு எம்.எஸ். படிக்க 5.9.2023 அன்று செல்ல இருக்கிறார் என்ற மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வதோடு விடுதலை வளர்ச்சிக்கு ரூ.2000 அளித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *