நியூயார்க், ஆக.13- உலகளவில் வறுமையை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்னடை வைச் சந்தித்து வருகின்றன. இது வரலாற்று ரீதியிலான பின்னடைவு என அய்.நா. அவை தெரிவித்துள்ளது.
பணக்கார உலக நாடுகள் வறுமையை நீக்க முன்னெடுத்த வழிமுறைகள் பெரும்பாலும் தோல்வி யடைந்துள்ள நிலையில் ஏற்ெகனவே தீர்மானிக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிப்பது நிச்சயமற்றதாக மாறி உள்ளது.
சூடான், மாலி, எத்தியோப்பியா, உகாண்டா,கென்யா உள்ளிட்ட அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் ஏகாதி பத்தியச் சுரண்டலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளில் வறுமை யில் சிக்கித் தவிக்கும் மக்களின் எண் ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதி கரித்து வருகிறது.
அண்மைய அறிக்கையில் கூட ஆப்பிரிக்காவில் பல நாடுகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகின்றன எனஅய்.நா. அவை குறிப்பிட்டுள்ளது. ஒரே நேரத்தில் குறைந்த எடை மற்றும் உடல் பருமன் என இரண்டு விதமான ஊட்டச்சத்து பிரச்சினைகளை ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொள்வதாகவும், இந்த ஊட்டச்சத்து மற்றும் வறுமையை உலக நாடுகளின் எந்த நடவடிக்கையும் கட்டுப்படுத்தவில்லை எனவும் அய்.நா. குறிப்பிட்டுள்ளது.
ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி கள், பருப்பு வகைகளின் விலை உலகளவில் பல நாடுகளில் அதிக மாக உள்ளது. வேலை யின்மை, போதிய ஊதியமின்மை, பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால் சத்தான உணவு வகைகளை பல குடும்பங்களால் வாங்க முடிவதில்லை.
2019 முதல் 2022 வரை உலகளவில் தானி யங்களின் விலை 60 சதவீதமும், பால் விலை 45 சதவீதமும், சமையல் எண்ணெய் விலைகள் 125 சதவீதம் வரையும் உயர்ந்துள் ளது என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக 2022 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71 சதவீத மக்களாலும், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் 6 சதவீத மக்களாலும் ஆரோக்கியமான உணவை வாங்க முடியவில்லை என அய்.நா. அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.