தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்

viduthalai
1 Min Read

சென்னை, ஆக.12- தமிழ்நாட்டில் திருவண்ணா மலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(12.8.2024) தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 800.75 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடக்கி வைத்தார். மேலும் ரூ. 1,192.45 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஆக. 12) தொடக்கிவைத்தார். இதன் மூலமாக தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *