35 மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம்

1 Min Read

ராமேஸ்வரம், ஆக. 11- இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று (10.8.2024) முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ஆக.8இல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், பாம்பனில் இருந்து சூசை, சார்லஸ், ரஞ்சன், அலெக்ஸ் ஆகியோரது நாட்டுப்படகில் 35 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர். இவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர்.

இதனைக் கண்டித்து நேற்று (10.8.2024) பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிறையில் உள்ள 35 மீனவர்கள் மற் றும் படகுகளை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *