தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு!
தூத்துக்குடி, ஆக. 10- தூத்துக் குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.8.2024 மாலை ஆறு மணி அளவில் தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் கோ.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
கும்பகோணம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த வேண்டிய அவசியத் தையும், 108 கோடிசெலவில், 155அடி உயரத்தில் அமையவுள்ள தந்தை பெரியார் சிலை உள் ளிட்ட பெரியார் உலகத்தின் சிறப்பு களையும் விளக்கி திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.
மாநகர மாணவர் கழக தலைவர் ஞா.இ.திரவியம், மாநகர கழக செயலாளர் செல்லத்துரை, மாவட்ட இளைஞரணி தலைவர் தி.இல.கார்த்திகேயன், பெருந்தகையாளர் கோபால்சாமி, மாவட்டக் கழக காப்பாளர் சு.காசி ஆகியோர் தீர்மானங்களை ஆதரித்து கருத்துரையாற்றினார்கள்.
நிறைவாக மாவட்ட கழக காப்பாளர் மா.பால்இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். பெரியார் மய்ய காப்பாளர் போஸ் நன்றி கூறினார்.
நிகழ்வில் புதிய வரவான மாணவர் இரா.மலைச்செல்வனுக்கு புத்தகம் வழங்கி மாவட்டத்தலைவர் வரவேற்றார்.
கலந்துரையாடலில், கும்பகோணத்தில் நடைபெற்ற கழகப்பொதுக்குழு தீர்மானங்களை வரவேற்பதுடன் செயலாக்குவது எனவும், 18.8.2024 அன்று பகுத்தறிவா ளர் கழகம் சார்பில் நடைபெறும் பேச்சுப்போட்டியை சிறப்பாக நடத்துவது எனவும், தலைமைக் கழக அறிவிப்பின்படி 22.8.2024 அன்று இராம.அன்பழகன் சிறப்புரையாற்றும் கூட்டத்தை சிவகளையில் எழுச்சியுடன் நடத்துவது எனவும், 1.9.2024 அன்று வீரவநல்லூர் வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும், நீட்எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் கன்னியாகுமரி முதல் சேலம் வரை பங்கேற்று சிறப்பித்த மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் நாகராசு,மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.நவீன்குமார் ஆகியோரை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.
அறிவுலகப்பேராசான் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை கொள்கைப் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.