வ.உ.சி.யின் பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Viduthalai
0 Min Read

சென்னை,நவ.18 – ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார்அவர்களின் நினைவு நாளையொட்டி (18.11.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ” என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள்! தன்இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் இந்திய விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாக சீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்வோம்! அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்!

-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *