ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

15.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வெளிநாடுகளில் நடைபெறும் கலவரங்கள் எதேச்சையாக நடைபெறுபவையாக உள்ளன. ஆனால் இந்தியாவில் திட்டமிடப்பட்டு பெரும்பான்மைவாத அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்கிறார் மூத்த எழுத்தாளர் ஆகார் படேல்.

* அரியானா நூஹ் மாவட்டத்தில் நாங்கள் மீண்டும் பேரணி நடத்துவோம்; அனைவரும் துப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்ற புல்வால் மாவட்ட மகா பஞ்சாயத்து முடிவிற்கு எதிராக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் ஆளுநர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேநீர் விருந்து புறக்கணிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு; நிகழ்ச்சியை ரத்து செய்தது ஆளுநர் மாளிகை

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும் செங்கோட்டையில் மோடியின் கடைசி உரை இதுதான்: மம்தா கருத்து

* கருநாடகாவில் அடுத்த கல்வியாண்டு முதல் தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு.

* ஆதிவாசி அதாவது பூர்வீக பழங்குடியினர் என்ற சொல்லை நீக்கி வனவாசி என பாஜக அரசு அழைப்பது அவர்களின் உரிமையை பறிப்பதாகும் என ராகுல் குற்றச்சாட்டு.

தி இந்து:

* ‘சமுதாயத்தில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும், நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என்று குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

* பி.எம்.-உஷா கல்வி திட்டத்தில் சேராத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி உதவி நிறுத்தம். தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் திட்டத்தில் சேர மறுப்பு.

தி டெலிகிராப்:

* ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அரசு தகவல்

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *