நிர்மலா சீதாராமனுக்கு தயாநிதி மாறன் எம்.பி. வித்தியாசமான கோரிக்கை

1 Min Read

சென்னை, ஜூலை 28- அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024இல் தமிழ்நாட்டிற்கு என்று தனியாக சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

அவர் கூறுகையில், ”கடந்தாண்டு தூத்துக்குடியில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வந்தார். அவங்க ஆட்கள் இருக்கும் கோயில் பகுதிக்கு மட்டும் சென்றிருந்த நிர்மலா சீதாராமனிடம் ஒருவர் கோயில் கட்டுமானம் பற்றி கூறினார். அந்த சமயம் ஒருவர் கோயில் உண்டியலில் பணம் போட வந்தார். அவரிடம், ‘கோயில் உண்டியலில் காசு போடாதீங்க. அது மாநில அரசுக்கு சென்றுவிடும். அர்ச்சகர் தட்டில் தட்சணை போடுங்க.’ என கூறினார். ”அதனை, ”வக்கிர புத்தி” என கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன், அடுத்ததாக, ”அதே போல நாங்களும் தமிழ்நாடு மக்களிடம் நீ வரி கட்டாதே, வரி கட்டினால் நம்ம பணம் டில்லிக்கு சென்றுவிடும் என நாம் கூறலாமா.? அது எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் பார்த்தீர்களா.? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், மக்களின் வலி அவருக்கு தெரியாது”. இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *