தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

Viduthalai
2 Min Read

அரசியல்

திருநெல்வேலி,ஆக.16-தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மாணவர், அவரது தங் கையை திருநெல்வேலி அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பள்ளி மாணவர்கள் மத்தியில் நச்சுக் கருத்துகளை பரப்புவது புதிதல்ல. நீண்டகாலமாகவே இது போன்ற ஜாதிய, மதவாத அரசியல் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் இதை செய்து வருகின்றன.

இதுபோன்ற சக்திகளால் இளம் தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படும் அவலம் நீடிக்கிறது. இந்த போக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

நாங்குநேரி சம்பவத்துக்குப்பின் நீதிபதி சந்துரு தலைமையில் விசா ரணை ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்துள்ளார். நாங்குநேரி சம்பவத்தை மட்டு மின்றி தமிழ்நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் நடைபெறும் ஜாதிய, மதவாத பிரச்சினைகள் குறித்தும், மாணவர்கள் மத்தியில் நச்சுக் கருத்துகளை பரப்புவதை குறித்தும் விரிவாக ஆய்வு செய்யும் இந்த ஆணையம் நல்ல வழிகாட்டு தலை தரும் என்று நம்புகிறேன். 

பாதிக்கப்பட்ட இந்த குடும் பத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும். மாணவரின் தாய்க்கு அரசின் சார்பில் நல்ல வீடு வழங்க வேண்டும். பாதுகாப்பாக அவர் பிள்ளைகள் படிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

முதலமைச்சரை சந்திக்கும் போது இந்த கோரிக்கையை எடுத் துரைப்பேன். பள்ளி மாணவர்களிடையே இந்த வன்மம் பரவுவதற்கு சமூக சூழல் காரணமாக இருக்கிறது.

ஜாதிப் பெருமையை பேசுவது, ஆண்ட பரம்பரை, ஆண்ட வம்சம் என்று சொல்லும் அரசியல், பிற சமூகத்தின் மீதான வெறுப்புக்கு இடம் கொடுக்கிறது. 

திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா 30 ஆண்டுகளுக்குமுன் வேதம் புதிது என்ற திரைப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், பிள்ளைகளை சுதந்திர மாக விடுங்கள், அவர்களிடம் நச்சுக் கருத்துகளை விதைக்காதீர்கள் என்று காட்சி அமைத்திருப் பார். அதையே இப்போது சுட்டிக் காட்டுகிறேன்.

இளம் தலைமுறையிடம் ஜாதிப் பெருமைகளை பேசுவது, ஆதிதிராவிட, பழங்குடியின, சிறு பான்மை சமுதாயத்தினருக்கு எதி ராக வெறுப்பு அரசியலை விதைப் பது தடுக்கப்பட வேண்டும்.

இந்த சமூகமே அதற்கு பொறுப் பேற்கும் நிலை இருக்கிறது. தீவிர வாத நடவடிக்கைகளை கண் காணிக்க உளவுப்பிரிவு, கியு பிரிவு இருப்பதைப்போல் ஜாதிய, மத வாத சக்திகளை கண்காணிக்க ஜாதி, மதவாத அடிப்படையிலான வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக் கைகளை எடுக்க வேண்டும்.

நாங்குநேரி, வள்ளியூரில் ஜாதி பெயரால் வன்முறைகள் தொடர் கின்றன. இதைத்தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. எனவே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து வரும் 18ஆம் தேதி சென்னையிலும், 20ஆம் தேதி திருநெல்வேலி மேலப்பாளையத் திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *