குடியாத்தம், ஜூலை 25- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 23.07.2024 மாலை 7 மணிக்கு , குடியேற்றம் போடி பேட்டை சாலையில் உள்ள பெரியார் அரங்கில் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர் 17, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி சிறப்பாக நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இப்போட்டியில் கலந்துக் கொள்ளும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மிக சிறப்பாக செய்திட ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. பேச்சுப்போட்டி 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்துவது என்றும் இப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க வேண்டுமென்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பாக உரையாற்றும் முதல் பத்து மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் பி.தனபால், நகர கழக தலைவர் சி.சாந்தகுமார், நகர கழக அமைப்பாளர் வி.மோகன், வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வே.வினாயகமூர்த்தி மற்றும் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் துணைத் தலைவர் க.சையத் அலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.