சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் ப.கோவிந்தராஜன் மார்பு அளவு உருவச் சிலையை அவரது குடும்பத்தினர் இணையர் கனிமொழி, மகள் மருத்துவர் தென்றல், மகன் டாக்டர் அறிவன், அன்பன் மற்றும் டாக்டர் சித்ரா, டாக்டர் சீனிவாசன் ஆகியோர் அமைத்து இருந்தனர். கோவிந்தராஜன் சிலையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து இயக்கத்திற்கு ஆற்றிய தொண்டினை எடுத்துக்கூறி நினைவுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அவரது குடும்பத்தின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, தமிழினியன், தியாகராஜன், கார்த்திகேயன், வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். (சென்னை, நங்கநல்லூர் – 22.7.2024)