குரூப் 2 முதல் நிலை தேர்வு 2,327 காலியிடங்களுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பம் தேர்வு நாள் செப்டம்பர் 14

1 Min Read

சென்னை, ஜூலை 22- வனவர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வெழுத 7.90 லட்சம் பட்டதாரிகள் விண்ணப் பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர், கணக்கர், உதவியாளர் உட்பட குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளில் 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 20ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு, செப்டம்பர்14ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 19.7.2024 அன்று முடிவடைந்தது.
தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வெழுத சுமார் 7.90 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களில் ஜூலை 24 முதல் 26ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இந்த முறை முதன்மைத் தேர்வு குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது. மேலும், இதுவரை குரூப் 2 பணிக்கு இருந்து வந்த நேர்முகத் தேர்வும் இனி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *