பொற்பனைக்கோட்டையிலும் தமிழர் நாகரிகத்தின் சான்றுகள்

viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு
புதுக்கோட்டை, ஜூலை 21 புதுக் கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2-ஆம் கட்ட அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதில், தங்க மூக்குத்திகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றன.
அதன் பிறகு அரண்மனை மேடு பகுதியின் தெற்கில் 2-ஆம் கட்ட அக ழாய்வு ஜூன் 18-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 6 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு 2-ஆம் கட்ட அகழாய்வு பணி நடை பெற்று வருகிறது. இப்பணிகளில் அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு குழியில் 280செ.மீ நீளமும், 218 செ.மீ. அகலமும்கொண்ட செங்கல் தளம் காணப்பட்டது. மேலும், சுமார் 2 செ.மீ நீளமுள்ள 5 செம்பு ஆணிகள், செம்பு அஞ்சன கோல்(மைதீட்டும் குச்சி),கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.
இதுவரை இரும்பு ஆணிகளே கிடைத்து வந்த நிலையில், தற்போது செம்பு ஆணிகள் கிடைத்திருப்பது வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *