இரண்டு ஆண்டு சந்தா

Viduthalai
1 Min Read

”குமி இன்சாப் மோர்ச்ச” அமைப்பின் சார்பாக பொற்கோவிலில் இருந்து கொடுத்தனுப்பியிருந்த பொன்னாடையை, பகுஜன் திராவிட கட்சியின் தேசியத் தலைவர் சர்தார் ஜீவன் சிங், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அணிவித்து மகிழ்ந்தார். மேலும் நினைவுப் பரிசாக எழுத்தாளர் பஜன் சிங் எழுதிய, ”குருதியில் பூத்த மலர்கள்” என்ற ஆங்கிலப் புத்தகத்தையும், சீக்கிய குருக்களின் வரலாற்று புத்தகத்தையும் வழங்கியதுடன், பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட இந்திய மக்களிடம் பெரியாரிய கருத்தியலை கொண்டு செல்ல வேண்டும் என கழகத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். உடன் பகுஜன் திராவிட கட்சியின், தேசிய மகளிர் அணித் தலைவர் திருமதி சீதா கோர், தமிழ் சீக்கிய கலாசார சகோதரத்துவ மற்றும் கல்வி நிறுவனத்தின் செயலாளர் ராஜன் சிங், பகுஜன் திராவிட கட்சியின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் வேலு சுப ராசர், கட்சியின் சென்னை அமைப்பாளர் மாரியப்பன் ஆகியோர். (பெரியார் திடல், 19.07.2024)

திராவிடர் கழகம்

படம் 2: தற்போது இங்கிலாந்தில் பணியாற்றி வரும் திருவொற்றியூர் மாவட்ட மேனாள் திராவிடர் கழக செயலாளர் தே. ஒளிவண்ணன் அவர்களின் சார்பாக அவரது வாழ்விணையர் உமா மகேஸ்வரி, மகள் மிளிரா ஆகியோர் விடுதலைக்கு இரண்டு ஆண்டு சந்தாக்களையும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூபாய் 1000 நன்கொடையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடல் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தே.சங்கர், குன்றத்தூர் கோபி ஆகியோர் உள்ளனர். (பெரியார் திடல், சென்னை – 19.07.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *