வாளாடி, ஜூலை 18 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14.07.2024 அன்று காலை 10.30 மணி அளவில் லால்குடி மாவட்டம் வாளாடி பகுதியில் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெ.கலியபெருமாள் வரவேற்புரை ஆற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட், லால்குடி மாவட்ட தலைவர் வால்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் வாளாடி வீ. அன்புராஜா தலைமை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். கலியபெருமாள், பனிமலர் செல்வமகன், ராமசாமி, வான்முடிவள்ளல், கு.பொ.பெரியசாமி, பிச்சைமணி, மணிவாசகம், ஆசைத்தம்பி, முரளிதரன், ராஜேந்திரன், முத்துச்சாமி, இசைவாணன், யுவராஜ், தனிஷ்கா, இந்து, வீரமணி, பாபு, சித்தார்த் உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும், தோழமை இயக்க தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
14.07.2024 அன்று காலை 9 மணி அளவில் லால்குடி கழக மாவட்டம் கீழவாளாடி பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் சட்ட எரிப்புப் போராளிகள் மைக்கேல், அங்கமுத்து ஆகிய பெரியார் பெருந்தொண்டர்களுக்கு முதல் குழுவின் சார்பாக பயனாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.