நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 13.07.2024 காலை 11.30 மணி அளவில் நிலக்கோட்டையில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் அவர்களும், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் அவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாசு அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மு.ஆனந்த முனிராசன், மாவட்ட செயலாளர் கே.ஆர் காஞ்சிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு. இளமாறன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மு.நாகராசன், தி.கா.செல்வம்,த.கருணாநிதி, இரா.சக்தி சரவணன், பாண்டி, சக்திவேல்,ச.பொன்ராஜ், கோ. சரவணன், பழ.நாகராஜ் உள்ளிட்ட திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.