பள்ளிக்கதவில் மனிதக் கழிவு பூசப்பட்ட நிகழ்வு ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்த கல்வித்துறை அதிகாரிகள்

Viduthalai
2 Min Read

திருத்தணி, ஆக. 20 –  திருத்தணி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கதவு பூட்டின் மீது, மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் குறித்து, அதி காரிகள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், மத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பிரதான கதவு மற்றும் பூட்டின் மீது, மனிதக் கழிவுகளை பூசியும், கழிப்பறையில் மதுபாட் டில்களை உடைத்தும், குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தியும் இருந்தனர். இதனால் ஆத்திர மடைந்த மாணவர்கள், பெற்றோர்  பள்ளியை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். 

இதையடுத்து, திருவள்ளூர் ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி கோட்டாட்சியர், முதன்மை கல்வி அலுவலர்மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளர் ஆகியோர், நேரில் சென்று விசாரித்து, முழுமையான அறிக்கை தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

திருத்தணி கோட்டாட்சியர் தீபா, தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் ஆகியோர் மத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ் வதி, திருத்தணி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் பள்ளியில் ஆய்வு செய் தனர். கோட்டாட்சியர் தீபா கூறிய தாவது:

பள்ளி பூட்டின் மீது மனிதக் கழிவுகள் பூசப்பட்டதற்கான கார ணம், ஜாதி பிரச்சினையா, மாண வர்கள் இடையே பிரச்சினையா, மனிதக் கழிவுகளை பூசியது யார் என, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மாசட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்படி பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோரிடம், விசா ரணை நடத்தினோம்.

இதில், ஜாதி பிரச்சினை இல்லை எனவும், மாணவர்கள் இடையே பிரச்சினை இல்லை எனவும் தெரிந்தது. வேண்டும் என்றே செய்துள்ளதாக தெரிந்தது. இதன் விரிவான அறிக்கை ஆட்சிய ருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முதன்மை கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி கூறியதாவது:

தற்போது படிக்கும் மாண வர்களுக்கு போதிய அளவிலான வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. கூடுதல் மாணவர் சேர்க்கை இருந் தால் மட்டுமே கூடுதல் கட்டடம் தேவைப்படும்.

மனிதக் கழிவு பூசப்பட்ட சம்பவம் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள் ளோம். காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர். இதுகுறித்த விசாரணை அறிக்கையை ஆட்சிய ருக்கு அனுப்பி உள்ளோம். இவ் வாறு அவர் கூறினார்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி கூறும் போது,”மாணவர்கள் பயன்படுத் தப்படும் கழிப்பறைகள் பழுதடைந் துள்ளன. இதை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து, முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். நிதி கிடைத்தவுடன் கட்டடம் பழுது பார்க்கும் பணி துவங்கப்படும்,” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *