ஒன்றிய அரசின் லட்சணம் – சி டெட் தேர்வில் ஆள் மாறாட்டம்: 12 பேர் கைது

Viduthalai
0 Min Read

தர்பங்கா, ஜூலை 11- ஒன்றிய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டெட்) நாடு முழுவதும் நடந்தது. பீகாரில் உண்மையான விண்ணப்பதாரர்களுக்குப் பதிலாக போலி தேர்வர்கள் பலர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பயோமெட்ரிக் கருவியின் கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தபோது ஆள்மாறாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து லஹேரியாச ராய் பகுதியில் 9 பேர், சதர் பகுதியில் 2 பேர், பகதுர்பூர் பகுதி தேர்வு மய்யத்தில் ஒருவர் என 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *