விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்க விரைவுப்பதிவு அறிமுகம்

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை ஆக 21 விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்திருப்பவர்கள், விரைவாக மின் இணைப்பு பெறும் வகையில் தக்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க லாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சாதாரணம், சுயநிதி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சாதாரணப் பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம், மின் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். இந்நிலையில், சுயநிதி பிரிவின் கீழ் தக்கல் என்னும் விரைவு திட்டத்தில் மின் இணைப்புப் பெற விரும்புவோர் வாரிய செயற்பொறியாளரை அணுகலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தக்கல் முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தக்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப் படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். எனவே, ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், தக்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதியின் மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு செயற்பொறியாளரை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *