சீனா இந்திய நிலப்பகுதியை பிடித்துள்ளது மோடி இதை மறைக்கிறார்-ராகுல்

Viduthalai
1 Min Read

லடாக், ஆக. 21- இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்க வில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- லடாக் மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அவர்களுக்கு வழங் கப்பட்ட தகுதி நிலையில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் அங்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

தங்களது நிலத்தை சீனா ஆக்கிர மித்துள்ளது குறித்து இங்குள்ள உள்ளூர்வாசிகள் கவலைப்படுகிறார்கள். தங்களது மேய்ச்சல் நிலத்தை சீனப் படையினர் அபகரித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஒரு அங்குலம் நிலத்தைகூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார். இங்கே நீங்கள் யாரிடமும் இதை கேட்கலாம். அவர் சொல்வதில் உண்மையில்லை. நான் சிறுவனாக இருந்தபோது தந்தை யுடன் பாங்காங் டிசோ பகுதிக்கு வந்து இருக்கிறேன். இது பூமியின் மிக அழகான இடம் என்று அவர் என்னிடம் கூறினார். 

இந்திய ஒற்றுமை நடைப்பயணத் தின்போது நான் லடாக் வர திட்ட மிட்டு இருந்தேன். ஆனால் சில கார ணங்களால் பயணத்தை நிறுத்தி  வைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் நான் பின்னர் இங்கு வந்து தங்கலாம் என்று நினைத்தேன். நுப்ரா பள்ளத் தாக்கு மற்றும் கார்கிலுக்கும் நான் செல்வேன் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *