மோடி அரசுக்கு அர்ப்பணம் எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு ‘பென் பின்டர்’ விருது பிரிட்டிஷ் நூலகத்தில் விருது வழங்கல்

1 Min Read

லண்டன், ஜூன் 29- புகழ்மிக்க ‘புக்கர்’ விருது வென்ற எழுத்தாளரான அருந்ததி ராய்க்கு நிகழாண்டுக்கான ‘பென் பின்டர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த மறைந்த நோபல் எழுத்தாளர் ஹரோல்ட் பின்டர் நினைவாக, பென் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ‘பென் பின்டர்’ விருது கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

வரும் அக்டோபர் 10-ஆம் தேதியன்று ‘பிரிட்டிஷ்’ நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அருந்ததி ராய்க்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. நிகழ்வில் அருந்ததி ராய் உரையாற்றவுள்ளார்.

விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எழுத்தாளர் அருந்ததி ராய், ‘பென் பின்டர் விருதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தில் நிகழ்ந்து வரும் புரிந்துகொள்ள முடியாத திருப்பங்களைப் பற்றி எழுத ஹரோல்ட் பின்டர் இன்று நம்முடன் இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அவர் இல்லாமையை நிரப்ப எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்’ என்றார்.

‘தி காட் ஆஃப் ஸுமால் திங்ஸ்’ எனும் தனது முதல் நாவலுக்காக புக்கர் விருதை வென்ற எழுத்தாளர் அருந்ததி ராய், 14 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துகள் காரணமாக பயங்கரவாத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *