கும்முடிப்பூண்டி: மாலை 6 மணி * இடம்: புழல் காவங்கரை * தலைமை: புழல். த. ஆனந்தன் * கருத்துரை: பொன்னேரி வி. பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ. சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறும் இரு சக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று வழியனுப்புவதற்காக,,, * இந்த நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், மற்றும் அனைத்து தோழர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் * இவண்: ஜெ. பாஸ்கர் (மாவட்ட செயலாளர்).
சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல்
சிதம்பரம்: மாலை 4 மணி * இடம்: புவனகிரி பேருந்து நிலையம் அருகில் * தலைமை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: நீட் எதிர்ப்பு வாகனப் பேரணி, விடுதலை சந்தா சேர்ப்பு * கழக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அவசியம் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: யாழ்.திலீபன் (மாவட்ட இணை செயலாளர்).
அரூர் மாவட்ட கழக கலந்துரையாடல்
அரூர்: பகல் 2 மணி* இடம்: சா.இராஜேந்திரன் இல்லம், அரூர் * வரவேற்புரை: தீ.சிவாஜி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழக காப்பாளர்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்டத் தலைவர்) * பொருள்: நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம்- திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் இரு சக்கர வாகன பயணத்திற்கு ஏற்பாடு, மற்றும் பங்கேற்பு குறித்து * சிறப்புரை: ஊமை ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர் திராவிடர் கழகம்) * சிறப்புரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றியுரை: மணி (பகுத்தறிவாளர் கழகம் அம்மாபேட்டை) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம் அரூர் கழக மாவட்டம்.
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல்
மத்தூர்: மாலை 3 மணி * இடம்: மத்தூர் சி.வெங்கடாசலம் இல்லம், பேருந்துநிலையம் பின்புறம், மத்தூர். * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் இருச்சக்கர வாகனப் பரப்புரை பயணக்குழு வருகைக்கு வரவேற்பு, விடுதலை சந்தா சேர்க்கைப் பணி, கழக ஆக்கப் பணிகள். * தலைமை: கோ.திராவிடமணி, (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: செ.பொன்முடி, (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர் பழ.பிரபு * சிறப்புரை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *கருத்துரை: அண்ணா. சரவணன் மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * நன்றியுரை: சி.வெங்கடாசலம், அமைப்புச்சாரா தொழிலாளரணி மாவட்டத் தலைவர் * கூட்டத்தில் அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், கிருட்டினகிரி.
ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஒசூர்: மாலை 4.00 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம், முனிஸ்வர்நகர், ஒசூர் * பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் இருச்சக்கர வாகனப் பரப்புரை பயணக் குழுவிற்கு ஒசூர், இராயகோட்டையில் வரவேற்பு, விடுதலை சந்தா சேர்ப்பு பணி, கழக ஆக்கப் பணிகள் * தலைமை: சு.வனவேந்தன் மாவட்டத் தலைவர் * வரவேற்புரை: பி.டார்வின் பேரறிவு * முன்னிலை: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் * நோக்கவுரை: அ.செ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர் * செயலாக்கவுரை: தர்மபுரி மா.செல்லதுரை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் * நன்றியுரை: பி.செந்தமிழ் பகுத்தறிவு மாவட்ட மாணவர் கழகத் தலைவர்.*கூட்டத்தில் கழக மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம்,தொழிலாளரின், இளைஞரணி, மாணவர் கழகம் அனைத்து பொறுப்பாளரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.* இவண்: ஒசூர் மாவட்ட திராவிடர் கழகம்.
பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல்
பெரம்பலூர்: மாலை 5 மணி* இடம்: மருத்துவர் குண கோமதி இல்லம், பெரம்பலூர். * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந. ஆறுமுகம் (நகர தலைவர்) * பொருள்: பெரம்பலூர் வருகை தரும் நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பேரணியை வரவேற்பது… இயக்க வளர்ச்சிப் பணிகள்… தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * இவண்: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு. விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம்
பெரம்பலூர் மாவட்டம், 1.7.2024 திங்கள்கிழமை
சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: காலை 11 மணி* இடம்: “குயில் பண்ணை” அம்மாப்பேட்டை, சேலம் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன் இல்லம் * தலைமை: வீ.அன்புராஜ் (திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்) * வரவேற்புரை: சி.பூபதி (சேலம் மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர் (மாவட்ட கழகக் காப்பாளர்), கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்டத் தலைவர்), அரங்க இளவரசன் (மாநகரத் தலைவர்) * பொருள்: ஜூலை 15 அன்று சேலத்தில் நடைபெறவிருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இரு சக்கர வாகன பரப்புரை நிறைவு பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள்…. * நன்றியுரை: இராவண பூபதி, சேலம் மாநகரச் செயலாளர் * கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி, மாணவர் அணி, இளைஞரணி, தொழிலாளரணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * இப்படிக்கு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்.