தீராத வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பானாம் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் முறைகேடுகள் – அதிகாரிகள் சோதனை!

Viduthalai
1 Min Read

திருமலை. ஜூன் 29- ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு அண்மையில் பதவியேற்ற பிறகு திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.அப்போது, “கடந்த ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சிறீவாணி அறக்கட்டளை நுழைவுச்சீட்டுகள், விஅய்பி பிரேக்தரிசன நுழைவுச்சீட்டுகள், ஒப்பந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார் வந்தன.

 n3 நாட்களாக
தீவிர சோதனை!
இதன் பேரில் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள பல்வேறு துறைகளில் விஜிலென்ஸ் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை செய்து வரு கின்றனர். நன்றாக இருந்த திருப்பதி கோவிந்தராஜர் கோயில் சத்திரங்களை இடித்துவிட்டு, புதிதாக சிறீபதம், அச்சுதம் என இரு விடுதிகள் கட்ட அனுமதி வழங்கி உள்ளனர். இதுகுறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டுள்ளது. இதுகுறித்தும் ஆய்வு செய்துஅரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். அமைச்சராக இருந்த ரோஜா, பெத்தி ரெட்டி மற்றும் மேனாள் அறங்காவலர் குழு தலைவர்கள் மீதான முறைகேடு குறித்தும் விசாரிக்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *