எளிய முறையில் ஆங்கிலம் கற்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

2 Min Read

சென்னை, ஆக. 26 – அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கி லம் கற்பிப்பதற்காக பள் ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (‘சமக்ர சிக்ஷா’), ஜாலி ஃபியூச் சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய முறையிலான பயிற்சித் திட் டத்தை செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதி காரிகள் கூறியதாவது:

ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டம் ‘ஜாலிஃபோ னிக்ஸ்’ முறையில் தமிழ் நாட்டில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆக.31-ஆம் தேதி வரை 25 மாவட்டங்களில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள மாவட்டங்க ளில் ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஜாலி ஃபோனிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு வேடிக்கையான முறை யில் ஆங்கிலம் கற்பிப்ப தற்கான ஒரு விளையாட்டு வழி முறையாகும். கதை மற்றும் செயல்பாடு கள் மூலம் எழுத்து ஒலி களைக் கற்றல், எழுத்து அமைப்பு, சொற்களில் உள்ள ஒலியைக் கண்டறி தல் உள்ளிட்ட 5 அத்தி யாவசிய திறன்களை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறையாகும். பயிற்சிக் கான பாடத்திட்டமும் இந்தத் திறன்களை மய்ய மாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கில்பர்ட் ஜாலி உரு வாக்கிய ‘ஜாலி ஃபோ னிக்ஸ்’ முறை ஒலிகளை உச்சரிப்பதில் குழந்தைகளைத் திருத்த ஆசிரியர்களுக்கு உதவுகிறது. எழுத்து உருவாக்கம், எழுத்து ஒலி கள், கலத்தல், பிரித்தல் ஆகியவற்றை சரியாக தெரியப்படுத்த ‘கேம்கள்’ பதிவேற்றப்பட்டுள்ளன.

ஜாலி லேர்னிங் லிமி டெட் மூலம் அங்கீகரிக் கப்பட்ட நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளர்களால் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு எழுத்தின் ஒலிகள் மற்றும் வகுப்பில் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளைக் கற்றுக் கொண்டு ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணி களை ‘சமக்ர சிஷா’ மாநில திட்ட இயக்குநர் எம். ஆர்த்தி, ஜாலி ஃபியூச் சர்ஸ் திட்ட மேலாளர் எஸ்.வி.கோமதி உள்ளிட் டோர் மேற்கொண்டனர் என அவர்கள் தெரிவித்த னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *