இந்தியாவில் கரோனா 73 ஆக உயர்வு

1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஆக.26 இந்தியாவில் 24.8.2023 அன்று 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 73 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 859 ஆக அதிகரித்தது. கரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணம் அடைந்தனர். 

இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 24 ஆக அதிகரித்தது. மொத்தம் 1,508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில், நேற்று ஒருவர் பலியானார். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 927 ஆக உயர்ந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *