இந்தியாவில் கரோனா 73 ஆக உயர்வு

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுடில்லி, ஆக.26 இந்தியாவில் 24.8.2023 அன்று 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 73 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 859 ஆக அதிகரித்தது. கரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணம் அடைந்தனர். 

இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 24 ஆக அதிகரித்தது. மொத்தம் 1,508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில், நேற்று ஒருவர் பலியானார். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 927 ஆக உயர்ந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *