சென்னை, ஜூன்25- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நேற்று (24.6.2024) பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புகளை அத்துறை யின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அறிவிப் பில் கூறப்பட்டதாவது:
அரசு பள்ளி மாண வர்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறை பயிற்சியின் மூலம் கற்றுத் தேர்வதற்கு, அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயர் தொழில்நுட்ப ஆய் வகங்கள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப படிப்படி யாக தரம் உயர்த் தப்படும்.
முதல்கட்டமாக 2024-2025ஆம் கல்வியாண்டில் 1,000 மாணவர்களுக்கு மேல் படித்து வரும் அரசு பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய் வகங்கள் ரூ.58 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
எந்திரனியல் ஆய் வகம் (ரோபோடிக் லேப்) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும். இந்த ஆண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா நடத்தப்படும்.
அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்று சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, அக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக செல்லும் முதல் பயணத் தொகை முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருச்சி, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம் மற்றும் திரு நெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் செயல் பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.41.63 கோடியில் தகைசால் நிறுவனங்களாக தரம் உயர்த்தப்படும். ஆசிரி யர்களுக்கு திறன் வளர் பயிற்சி ரூ.3.15 கோடியில் வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்ட மய்ய நூலகத்துக்கு புதிய கட்டடம் ரூ.6 கோடியில் கட்டப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வருகை தரும் சிறுவர்களின் அறிவியல் அறிவினை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சத்தில் நிறுவப்படும். ரூ.1.14 லட்சத்தில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும் என மொத்தம் 25 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.