இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிப்பு உண்மையை மறைக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

லடாக், ஆக.26  வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினரான  ராகுல் காந்தி நேற்று (25.8.2023) லடாக்கின் கார்கில்  பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய பொதுக் கூட்டம் ஒன்றில்   பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:  இன்று லடாக்கின் ஒவ்வொரு பகு திக்கும் சென்று வந்துள்ளேன். மக்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறேன்.

நாட்டின் ஓர் அங்குல நிலத்தைக் கூட யாரும் எடுக்கவில்லை, ஆக்கிரமிக்க வில்லை என்று பிரதமர் மோடி சொன்னது பொய். நம் நாட்டின் நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது லடாக்கில் உள்ள அனைவ ருக்கும் தெரியும். பிரதமர் மோடி உண்மையைச் சொல்லவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். அவர் லடாக் மக்களிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கி தொழிலதிபர் அதானி குழு மத்துக்கு வழங்கி வருகிறார். அவர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.   இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *