‘பிக்ஸ்டு டர்ம்’ வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டை ஆவடி திண் ஊர்தித் தொழிலகம் பின்பற்ற வேண்டும்! டி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 24- ஆவடி திண் ஊர்­தித் தொழி­லக தொ.மு.ச.வின் தலை­வர் டி.கே.எஸ். இளங்­கோ­வன் விடுத்­துள்ள அறிக்கை ஒன்­றில், “ஆவடி திண் ஊர்­தித் தொழி­ல­கம், ‘Fixed Term’ வேலை­வாய்ப்­பில், தமிழ்­நாட்டு இட ஒதுக்­கீட்­டைப் பின்­பற்ற வேண்­டும்” என்று குறிப் பிட்­டுள்­ளார்.

அவ­ரது அறிக்கை வரு­மாறு:–

‘பிக்ஸ்டு டர்ம்’ வேலை­வாய்ப்பு என்ற அடிப்­ப­டை­யில் 4 வரு­டத்­திற்கு டெக்­னிக்­கல் காண்ட்­ராக்ட் எடுக்க எச்­வி­எப் நிர்­வா­கம் 18.6.2024 அன்று விளம்­ப­ரம் அளித்­துள்­ளது.

வாட­கைக்கு அமர்ந்து – துரத்து (ஹேர் மற்­றும் பேர்) என்ற கார்ப்­ப­ரேட் சித்­தாந்­தத்­தின் அடிப்­ப­டை­யி­லும், ஒன்றிய அர­சின் ‘அக்­னி­வீர்’ திட்­டத்­தின் ஒரு பகு­தி­யா­க­வும் எச்­வி­எப் நிர்­வா­கம் இந்த டெக்­னிக்­கல் காண்ட்­ராக்டை கொண்டு வரத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தெரி­கி­றது.
இளை­ஞர்­க­ளின் வேலை­வாய்ப்பை கேள்­விக்­கு­றி­யாக்­கும் இந்­தத் திட்­டத்­தில் எள்­ள­ள­வும் நமது எச்வி.எப் தொ.மு.ச.வுக்கு நம்­பிக்கை இல்லை.
மேலும் தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளின் வேலை­வாய்ப்­பைக் கேள்­விக்­கு­றி­யாக்­கும் வகை­யில் இட ஒதுக்­கீட்­டைப் பின்­பற்றி விளம்­ப­ரப் படுத்தி உள்­ளது, “குரங்கு அப்­பம் பிட்ட கதை­யாக உள்­ளது” இதனை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

உதா­ர­ணத்­திற்கு ஒன்­றிய அர­சால் கொண்­டு­வ­ரப்­பட்ட ‘ அரிய வகை ஏழை­க­ளுக்­கான (இட­பிள்­யூ­எஸ்) இட ஒதுக்­கீ­டா­னது இன்று வரை தமிழ்­நாடு அர­சால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­ வில்லை.

தமிழ்­நாட்­டில் இருக்­கும் ஆவடி எச்­வி­எப் ஆனது, ஒன்றிய அர­சுப் பணி­யி­டங்­க­ளுக்­குப் பின்­பற்­றும் இட ஒதுக்­கீ­டான 19: 1 : 21 (எஸ்.சி : எஸ்.டி.: ஒ.பி.சி.) என்ற இட ஒதுக்­கீட்­டைப் பின்­பற்­றா­மல், இ.டபிள்யூ.எஸ். என்ற புதிய இட ஒதுக்­கீட்­டைப் புகுத்­தி­யும் ஒரு எஸ்.டி. தொழி­லா­ளிக்கு கூட இட ஒதுக்­கீடு தரா­மல் விளம்­ப­ரம் செய்­துள்­ளது இளை­ஞர்­க­ளுக்கு செய்­யும் துரோ­க­மா­கவே எச்­வி­எப் தொ.மு.ச. கரு­து­கி­றது.

ஆகவே தமிழ்­நாடு இட ஒதுக்­கீட்­டின்­படி எச்­வி­எப் நிர்­வா­கம் ‘பிக்ஸ்டு டர்ம்’ வேலை­வாய்ப்பு விளம்­ப ­ரத்தை திருத்தி விளம்­ப­ரம் செய்ய வேண்­டும் என்­றும், அந்த இட ஒதுக்­கீட்­டில் தமிழ்­நாட்டு இளை­ஞர்­களை மட்­டுமே பணி­ய­மர்த்த வேண்­டும் என்­றும் எச்­வி­எப் தொ.மு.ச. கேட்­டுக்­கொள்­கி­றது. – இவ்­வாறு, டி.கே.எஸ். இளங்­கோ­வன் தெரி­வித்­துள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *