நீட் தேர்வில் ஒருதலைப்பட்சம்: அனிதாவின் மதிப்பெண் சான்றிதழைப் பகிர்ந்த கேரள காங்கிரஸ்!

1 Min Read

திருவனந்தபுரம், ஜூன் 17– 98 சதவீதம் பெற்ற மாணவியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால், 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இது எவ்வாறு சாத்தியமா னது என்று கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அனிதாவின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இணைத்து கேள்வி எழுப்பி யுள்ளது.

இதுகுறித்து கேரள காங் கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த் தப்பட்டச மூக மாணவியான அனிதா 12 ஆம் வகுப்பில் 1200 க்கு 1176 மதிப்பெண்கள்(98 சதவீதம்) எடுத்தும் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனிதா மிகவும் ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலிப் பெண். சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அனிதா, 12ஆம் வகுப்பு வரை தனது பள்ளியில் எப்போதும் முதலிடத்தில் இருந்தார். 2017 இல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், தமிழ்நாட்டில் மருத்து வச் சேர்க்கை 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தீர்மானிக் கப்பட்டு வந்தது. அவரும் 1176/1200 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.

98 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. ஆனால், 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் தோல்வியடைந்த ஒருவர் நீட் தேர்வில் 720 க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். இது எவ்வாறு சாத்தியமானது. நீட் தேர்வு முறைகேடானது.
மேலும், உச்சநீதிமன்றம் அனிதாவின் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் அனிதா ஒரு தியாகி” என்றும் தனது பதிவில் குறிப் பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *