பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியாவிற்கு மேலும் பின்னடைவு

1 Min Read

ஜெனீவா, ஜூன் 13- உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இரண்டு இடங்கள் சரிந்து இந்தியா 129-ஆவது இடம்பிடித்துள்ளது.

இதுதொடா்பாக உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் அய்ஸ்லாந்து, ஃபின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இதன் மூலம், அந்த நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குறியீட்டில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 129-ஆவது இடம்பிடித்துள்ளது. பாகிஸ்தான் மூன்று இடங்கள் சரிந்து 145-ஆவது இடத்திலும், கடைசி இடமான 146-ஆவது இடத்தில் சூடானும் உள்ளன. இதன் மூலம், இந்த நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.

தற்போதைய வேகத்தில், பாலின சமத்துவத்தை முழுமையாக எட்ட 134 ஆண்டுகள், அதாவது 5 தலைமுறைகளாகும் என்று உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாக இயக்குநா் சாதியா சாஹிதி கூறுகையில், ‘பாலின சமத்துவத்தை எட்டுவதற்கு, குறிப்பாக பொருளாதார, அரசியல் தளங்களில் சமத்துவத்தை எட்டுவதற்கு புத்துயிர் கொண்ட உலகளாவிய அா்ப்பணிப்பு அவசரத் தேவையாக உள்ளதை இந்தக் குறியீடு சுட்டிக்காட்டுகிறது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *