சிதம்பரம் யாழ்.திலீபன் இல்ல மணவிழா தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

Viduthalai
1 Min Read

சிதம்பரம், ஜூன் 12- சிதம்பரம் கழக மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபனின், இரண்டாவது மகன் யாழ்.வீரமணிக்கும் – த.ரஞ் சிதாவிற்கும் 10.6.2024 திங்களன்று கீரப்பாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி, மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், கழக காப்பாளர் ஆர்.பன்னீர்செல்வம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உயர்மட்டக் குழு உறுப்பினர் மு.பாலகுருசாமி, மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் தமிழர் தலைவர் வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைத்து உரையாற்றினார். புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திமுக தலைமைக் கழக பேச் சாளர் கீரை கோ.வீரமணி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் மற்றும் கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், தமிழக வாழ் வுரிமைக் கட்சி செயலாளர் சேரலா தன், கடலூர் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர், செந்தூர்பாண்டியன், விருத்தாசலம் மாவட்ட கழக தலைவர் இளங்கோவன், திமுக கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலர் சபாநாயகம், தலைமைக் கழக அமைப்பாளர் சிந்தனைச் செல்வன், அரியலூர் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தலைவர் குணசேகரன், புதுவை மாவட்டத் தலைவர் அன்பரசு, விருத்தாசலம் மாவட்ட செயலாளர் வெற்றிச்செலவன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.
இவ்விழாவில் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், ஆறு.கலைச்செலவன், ப.க. மாவட்டத் தலைவர் கோவி.நெடுமாறன், ஆண்டிபாளையம் ப.முருகன், பாளையங்கோட்டை க.பெரியண்ணசாமி, சூசை, மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், இணையர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *