தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள புதிய வாட்ஸ் அப் அலைவரிசை

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களைத் தீட்டி சிறப் பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

பொதுமக்கள் அனைத்து அரசுத் திட்டங்கள் குறித்தும் முழுமையாக அறிந்து கொண்டு பயனடையத் துணைபுரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் Facebook, Instagram, Twitter, மற்றும் Youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இதன் அடுத்த கட்டப் முன்னெடுப்பாக அதிகாரபூர்வ கட்செவி (Whatsapp) சேனல் ”TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் பொதுமக்கள் இணைந்து அரசின் திட் டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள மேலே யுள்ள துலங்கல் குறியீடை (QR Code) ஸ்கேன் செய்யவும்.

மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத் துறையின் மேற்கண்ட சமூக வலை தள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *