வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரியில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்

Viduthalai
1 Min Read

கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

அரசியல், இந்தியா

புதுடில்லி, ஆக30 தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 1 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று (29.8.2023) உத்தரவிட்டது.

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆ-வது கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கருநாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவா திக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். 

ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் கருநாடக அரசு, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கருநாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. கருநாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், இதை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கூறியிருக்கிறது. இது தமிழ்நாடு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

15 நாட்கள் செப்.12-ஆம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவை ஏற்க கருநாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *